கோவையில் ஒரே நாளில் சாலை விபத்தில் 3 பேர் பலி..

கோவை ஆர் .எஸ். புரம். மெக்ரிக்கர் ரோட்டை சேர்ந்தவர் மோகன் (வயது 60) இவர் ஆனைகட்டி – தோளம்பாளையம் ரோட்டில்புல்லட் பைக் ஓட்டிச் சென்றார் அப்போது அந்த வழியாக வேகமாக வந்து ஒரு கார் இவரது பைக் மீது மோதியது. இதில் மோகன் படுகாயம் அடைந்தார். இவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார் . இது குறித்து மோகனன் மனைவி கங்காதேவி தடாகம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் கார் ஓட்டி வந்த கவுதம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போல சாய்பாபா காலனி பக்கமுள்ள இடையர்பாளையம் சிவாஜி காலனி, ஓம் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 77) இவர் சிவாஜி காலணி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது. இதில் மணியம்மாள் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சை மருத்துவமனையில் சேர்ந்தனர் அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பைக் ஓட்டி வந்த இடையர்பாளையத்தைச் சேர்ந்த பத்ரீஷ் (வயது 18) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .அன்னூர் சிறுமுகை ரோட்டை சேர்ந்தவர் கேசவன் (வயது 66) இவர் பைக்கில் அன்னூர் -சக்தி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பைக்கும் இவரது பைக்கும் மோதிக்கொண்டன.இதில் கேசவன் அவரதுபைக்கில் பின்னால் இருந்த ராகவன் (வயது 19) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் கேசவன் இறந்தார் இதுகுறித்து அன்னூர் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் மற்றொரு பைக் ஓட்டுவந்த அன்னூர் ஜெ.ஜெ.நகரை சேர்ந்த சூரிய தேவா (வயது 22 1என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..