கோவையில் மேலும் 3 புதிய மகளீர் காவல் நிலையம்..!

கோவை மாநகரத்தில் 3 பெண்கள் காவல் நிலையங்களும்,மாவட்டத்தில் 4 பெண்கள் காவல் நிலையங்களும் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. தற்போது மேலும் 3 பெண்கள் காவல் நிலையங்கள் தொடங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி கருமத்தம்பட்டி உட்கோட்டத்தில் உள்ள சூலூரில் ஒரு பெண்கள் காவல் நிலையமும்,வால்பாறை சப் டிவிஷன் உள்ள ஆனைமலையில் புதிய பெண்கள் காவல் நிலையமும், கோவை தெற்கு டிவிஷனில் உள்ள போத்தனூரில் ஒரு பெண்கள் காவல் நிலையமும் புதிதாக விரைவில் தொடங்கபட உள்ளது. இந்த தகவலை உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்..