வீட்டுமனை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஒரு கோடி லபக் – 3 கேடிகள் கைது.!

தாம்பரம் போலீஸ் கமிஷனர் முனைவர் அ அமல்ராஜ்ஜை சந்தித்த அப்பாவி ரத்தின ராஜராஜன் வயது 50 கமிஷனர் காலில் விழுந்து கதறி கதறி அழுதார். தன்னுடைய அப்பா பெயர் முத்துமாறன் தன்னுடைய வீடு சாந்தி நிகேதன் பாலமுருகன் நகர் 2 வது குறுக்குத் தெரு கீழ்கட்டளை சென்னையில் வசிப்பதாகவும் கௌரிவாக்கம் பகுதியில் உள்ள பழனியப்பா நகர் 2 வது தெருவில் 2 ஆயிரத்து 625 சதுர அடி காலி மனையை உலக மகா கேடிகள் 1. வி மோகன் 2. ஜி சுப்பிரமணியன் 3. டீ. கிருஷ்ணன் ஆகியோர் ரத்தின ராஜ ராஜனை அழகாக ஏமாற்றி ரூபாய் ஒரு கோடியை ஏமாற்றி வாங்கிக்கொண்டு மேற்படி இடத்தை த்தை விற்பனை செய்வதாக கூறி அந்த இடத்தின் மீதான அடமானத்தை ரத்து செய்வதாக கூறி பத்திரப்பதிவு செய்து தருவதாக நம்ப வைத்து சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வரவழைத்து அடமானத்தை ரத்து செய்வதில் சிக்கல் உள்ளது என்று சொல்லிச் சென்றவர்கள் மீது சந்தேகம் உள்ளது என விசாரித்ததில் கேடிகள் மூன்று பேரும் போலியான ஆவணங்கள் மூலம் ஆள் மாறாட்டம் செய்து பிராடு வேலை செய்பவர்கள் என தெரிய வந்தது இந்த மூன்று கேடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி கமிஷனரிடம் புகார் கொடுத்தார் அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கடுமையான நடவடிக்கை எடுத்து கைது செய்ய உத்தரவிட்டார் தொடர்ந்து இந்த மூன்று கேடிகள் தலை மறைவாக இருந்தனர் அவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கி டுக்கி பிடி போட்டு தப்பி ஓடாமல் நைலான் கயிற்றை வீ சி மடக்கி பிடித்து கைது செய்தனர் அந்த உலக மகா பிராடுகள் பெயர் விபரம் வருமாறு 1. வி மோகன் வயது 62 தகப்பனார் பெயர் வீரராகவன் வித்யா சுரபி ஸ்கூல் ரோடு புழுதிவாக்கம் ராம் நகர் வடக்கு சென்னை2. ஜி சுப்பிரமணியன் வயது 53. தகப்பனார் பெயர் கணேசன் ராகவேந்திரா தெரு சதாசிவ நகர் மடிப்பாக்கம் சென்னை 3. டீ கிருஷ்ணன் வயது 59. தகப்பனார் பெயர் திருமேனி கலைமகள் தெ ரு விரிவாக்கம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அபார்ட்மெண்ட் புழுதிவாக்கம் சென்னை ஆகிய மூன்று கேடிகளையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்