ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 21 பவுன் நகை திருட்டு.!!

கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த  சகன் பீவி (வயது 54) இவர் மேட்டுப்பாளையத்தை அடுத்த ஓடந்துறை பகுதியில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று கோவையிலிருந்து ரயில் மூலம் மேட்டுப்பாளையத்திற்கு சென்றார். முன்னதாக அவர் கரும்பு கடையில் இருந்து டவுன்பஸ்சில் கோவை ரயில் நிலையத்திற்கு வந்தார் .அப்போது பையில் 22 பவுன் நகைகள் வைத்திருந்தார். ஓடந்துறைக்குச் சென்றதும் அந்த பையை அவர் திறந்து பார்த்தார். அப்போது அதில் வைத்திருந்த 22 பவுன் தங்க நகைகள் காணவில்லை .இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சகன் பீவி உடனடியாக கோவை திரும்பி உக்கடம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.