ஆசீர்வாதம் செய்வது போல் வந்து கோவை கல்லூரி மாணவரிடம் பணம் பறித்த 2 திருநங்கைகள் கைது..!

கோவை சேரன் மாநகரை  சேர்ந்தவர் அய்யனார் ( வயது 20) கல்லூரி மாணவர். இவர் ஆர். எஸ். புரம். டி. பி ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 திருநங்கைகள் அய்யனாரிடம் ஒரு ரூபாய் கேட்டனர். அவர் ரூபாய் கொடுத்தவுடன் தலையில் கையை வைத்து ஆசீர்வாதம் செய்தனர். பின்னர் நைசாக அவரது பாக்கெட்டில் இருந்த ரூ 2 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தப்பிவிட்டனர். இது குறித்த அய்யனார் ஆர். எஸ் .புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் அய்யனாரிடம் பணம் பறித்தது கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த திருநங்கைகள் காவியா ( வயது 32) ஷிவானி (வயது 35) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.