கோவையில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் இந்து முன்னணி நிர்வாகி உட்பட 2 பேர் கைது..!

கோவை ராமநாதபுரம் பகுதியில் இருசக்கர வாகனம் அடிக்கடி திருட்டு போனது. இது குறித்து இராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபா தேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.இந்த நிலையில் இதில் தொடர்புடைய 2 பேரை நேற்று கைது செய்தார்..விசாரனையில் அவர்கள் திருப்பூர் அனுப்பர்பாளையம் கோகுலம் காலனி சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 29)நாகன்னாபுரம் ஆறுமுகத்தாம் பாளையம் ராஜேஸ் (வயது 25) என்பது தெரிய வந்தது.இவர்களில் பாலகிருஷ்ணன் இந்து முன்னணி திருப்பூர் மாநகர தலைமை நிலைய செயலாளராக உள்ளார். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..