நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கி கொண்டிருந்த இளம்பெண்ணை கட்டிப் பிடித்த வாலிபர் கைது-கோவையில் பரபரப்பு.!!

கோவை  போத்தனூர் அருகே உள்ள செட்டிபாளையம் ,கலைஞர் நகரை சேர்ந்தவர் செல்வம். கூலி தொழிலாளி. இவர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் ஒரு ஆசாமி அவரது வீட்டினுள் புகுந்து அவரது 20-வயது மகளின் கையை பிடித்து இழுத்து கட்டிப் பிடித்தாராம்.. உடனே அந்த பெண் சத்தம் போட்டார் .இதனால் தந்தை செல்வம் எழுந்து குடும்பத்தினர் உதவியுடன் அந்த ஆசாமியை மடக்கி பிடித்து செட்டிபாளையம் போலீசில் ஒப்படைத்தார்.போலீசார் அவரை கைது செய்தனர்.விசாரணையில் அவர் மலுமிச்சம்பட்டி அவ்வை நகரை சேர்ந்த பூவரசன் ( வயது 25) என்பது தெரிய வந்தது. இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ,கொலை மிரட்டல், மானபங்கம்உட்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..