கோவையில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலி..!

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள காளியப்ப கவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 85) இவர் நேற்று பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் உள்ள சுப்பேகவுண்டன் புதூர் சுங்கம் பஸ் ஸ்டாப் அருகே ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்தலாரிஇவர் மீது மோதியது .இதில் சுப்பிரமணியம் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார் .இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த லாரி டிரைவர் ஜான்சன் ( வயது 33) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் விசாரணைநடந்து வருகிறது.

இதே போல கிணத்துக்கடவு பக்கமுள்ள தேவனாம்பாளையத்தை சேர்ந்தவர் மாரியப்பன் ( வயது 59)இவர் நேற்று நெகமம்- கப்பளாங்கரை ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று டயர் வழுக்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வழியில் அவர் இறந்தார் .இது குறித்து அவரது மகன் காளிஸ்வரன் நெகமம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.