கோவையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து 2 பேர் சாவு..

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 49) டெம்போ டிரைவர். இவர் நேற்று சாய்பாபா காலனி வேலாண்டிபாளையம் ரோட்டில் உள்ள சாஸ்திரி வீதியில் அளவுக்கு அதிகமாக மது குடித்து ஈச்சர் வேனுக்குள் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதே போல கோவை சரவணம்பட்டி ,முருகன் நகரை சேர்ந்தவர் கண்ணுசாமி எபனேசர் ( வயது 73) குடிப்பழக்கம் உடையவர். இவர் நேற்று அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக விளாங்குறிச்சி ரோட்டில் நடந்து வந்தார். அப்போது திடீரென்று கீழே விழுந்து இறந்தார்.இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.