லாட்டரி டிக்கெட் விற்ற 2 பேர் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள அங்கலகுறிச்சி .சின்னமில் வீதியைச் சேர்ந்தவர் ஜீவபாரதி ( வயது 35) இவர் அங்கக்குறிச்சி கைகாட்டி பஸ் ஸ்டாப் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தாராம். இவரை ஆழியாறு சிறப்பு சரவணன் கைது செய்தார். இவரிடம் இருந்து 33 லாட்டரி டிக்கெட்டுகளும் ரூ 1320 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள தெங்குப்பாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் மாணிக்கவாசகம் (வயது 52) இவர் அங்குள்ள கோவில் அருகே லாட்டரி டிக்கெட் விற்று கொண்டிருந்தாராம். இவரை பெரியநாயக்கன்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் கைது செய்தார். பணமும்,லாட்டரி டிக்கெட்களும் பறிமுதல் செய்யப்பட்டது .இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.