பெயிண்டரை குடையால் குத்திய நண்பர் கைது..!

கோவை அருகில் உள்ள பேரூர் பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60 )அதே ஊரை சேர்ந்தவர் அய்யாசாமி ( வயது 43) இருவரும் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார்கள்.நண்பர்களுக்கிடையே  பணம்-கொடுக்கல்- வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது .இதில் ஆத்திரமடைந்த அய்யாசாமி மழைக்கு பிடிக்க வைத்திருந்த குடையால் ராஜேந்திரனின் கழுத்தில் குத்தினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து ராஜேந்திரன் பேரூர் போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்கு பதிவு செய்து அய்யாசாமியை கைது செய்தார் .இவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.