மருத்துவக் கல்லூரி மாணவரை கல்லால் தாக்கி படுகாயம் – 8 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ள தண்ணீர் டேங்க் ரோட்டை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகன் ஜனல் ஜெபக்குமார் (வயது 21 ) கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று சவுரிபாளையத்தில் தனது நண்பரின் வருகைக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் இவரிடம் தகராறு செய்தனர் .இதை யடுத்து மேலும் 5 பேர் 2 மோட்டார் சைக்கிளில் வந்தனர். இவர்கள் 8 பேரும் சேர்ந்து ஜனல் ஜெபக்குமாரை கல்லால் தாக்கினார்கள். இதில் இவர் காயம் அடைந்தார் .இவர் சிகிச்சைக்காககோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ஜனல்ஜெபக்குமார் பீளமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் இது தொடர்பாக விசாரணை நடத்தி ஆதித்யா, ஜீவா, ஹரிஷ் உட்பட 8 பேர் மீது 3பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..