சாலை விபத்தில் 2 பேர் பலி..

கோவை சுந்தராபுரம் மாச்சம் பாளையம் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் ( வயது 68) நேற்று இவர் சுந்தராபுரம்- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வேகமாகவந்த ஸ்கூட்டர் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில். சேர்த்தனர்.அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இதுகுறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்துக் புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஸ்கூட்டர் போட்டி வந்த உக்கடம் ஜி .எம். நகரை சேர்ந்த அப்துல்லா (வயது 48) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதே போல சரவணம்பட்டி கிருஷ்ணாபுரம் கபிலர் வீதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது38) நேற்று இவர் பைக்கில் சத்தி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது பைக்கும் அந்த வழியாக வந்த மற்றொரு பைக்கும் மோதிக்கொண்டன. இதில் ஆனந்தகுமார் படுகாயம் அடைந்தார் .அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து மற்றொரு பைக் ஓட்டி வந்த ஆகாஷ் (வயது 23) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.