பட்டப்பகலில் துணிகரம்… வீடு புகுந்து நகை, பணம் திருட்டு..!

கோவை உக்கடம் கோட்டைமேடு எல். எம் ஆர் .வீதியை சேர்ந்தவர் ஜான்ஷா. இவரது மனைவி பர்சனா (வயது 28) நேற்று இவர் வீட்டை திறந்து போட்டுவிட்டு மாடிக்குச் சென்று தொட்டியில் தண்ணீர் இருக்கிறதா? என்பதை பார்க்கச் சென்றார் .திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் கைப்பையில் வைத்திருந்த 2 பவுன் செயினை பணம் ரூ 8ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை..வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவை பார்த்தபோது 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அந்த நகை- பணத்தை திருடியது தெரிய வந்தது. இது தொடர்பாக பர்சனா உக்கடம் போலீசில், புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகிறார்கள்.