2 பஸ்கள் மோதி தாய் பரிதாப பலி – மகன் படுகாயம்..

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கம் உள்ள கோதவாடி, அரிசன காலனி சேர்ந்தவர் சிவலிங்கம், இவரது மனைவி அங்காத்தாள்( வயது 53) மகன் முனியப்பன் (வயது 36) இவர்கள் 2 பேரும் நேற்று கோவை -பொள்ளாச்சி ரோட்டில் நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ் இவர்கள் மீது மோதியது .இதில் அங்காத்தாள் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் இருந்து வந்த மற்றொரு பஸ் இவர் தலையில் ஏறியது. இதில் படுகாயம் அடைந்த அங்காத்தாள் அதே இடத்தில் இறந்தார்.இவரது மகன் முனியப்பன் காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இவர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தனியார் பஸ் டிரைவர்கள் சந்தோஷ், செந்தில்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.