கஞ்சா, போதை மாத்திரை விற்பனை செய்து வந்த 3 இளைஞர்கள் கைது..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையில் போலீசார் நேற்று அங்குள்ள பெட்டதாபுரம் ஆர்ச் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த 3பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 200 கிராம் கஞ்சா, 208 போதை மாத்திரைகள், 4டிஸ்போ இன்ஜெக்ஷன், ஒரு பாட்டில் சோடியம் குளோரைடு கைப்பற்றப்பட்டது.விசாரணையில் அவர்கள் பெரியமத்தம்பாளையத்தை சேர்ந்த கோவர்தனன் ( வயது 23)பிட்டு பிரவீன் என்ற பிரவீன்குமார் (வயது 21 )நவீன் குமார் (வயது 21) என்பது தெரிய வந்தது.இவர்கள் இந்த போதை மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வரவழைத்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.