2 பைக்குகள் நேருக்கு நேர் மோதல் – முதியவர் பரிதாப பலி..

கோவை சூலூர் பக்கம் உள்ள நீலம்பூர் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் முருகசாமி ( வயது 76 )இவர் நேற்று அதே ஊரைச் சேர்ந்த சதீஸ் என்பவருடன் பைக்கில் அவிநாசி – கோவை சாலையில் சென்று கொண்டிருந்தார். நீலம்பூர் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு பைக்கும், இவர்கள் சென்ற பைக்கும் மோதிக்கொண்டன. இதில் பைக் ஓட்டி வந்த சதீஷ், பின்னால் இருந்து வந்த முருகசாமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முருகசாமி இறந்தார். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மற்றொரு பைக் ஓட்டி வந்த சிவசிதரத் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.