கோவையில் 90 போதை மாத்திரைகளுடன் 2 பேர் கைது..!

கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் ,சப் இன்ஸ்பெக்டர் அய்யா சாமி ஆகியோர் நேற்று காந்திபுரம் சத்தியமூர்த்தி ரோடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 90 போதை மாத்திரைகள்  இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் அவர்கள் சிவானந்தா காலனி ரத்தினபுரி கணேஷ் நகரை சேர்ந்த சைமன் கிறிஸ்டோபர் ( வயது 29) ரத்தினபுரி பக்தவச்சலம் வீதியைசேர்ந்த ரஞ்சித் ( வயது 23 )என்பது தெரியவந்தது.இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே காட்டூர், ரத்தினபுரி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.