கோவையில் பேத்தி, பேரன்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 75 வயது கொடூர தாத்தா போக்சோவில் கைது..!

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 75 வயது முதியவர். இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் மகன் வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகனுக்கு 8 வயது மற்றும் 6 வயதில் 2 மகன்களும் 2 வயது பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் குழந்தையின் தாய் அந்த பெண் குழந்தையை குளிக்க வைத்த போது அத உடலில் காயம் இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார் .இது குறித்து கோவிபாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினார்கள் .அதில் அந்தப் பெண் குழந்தையின் தாத்தா இரண்டு வயது குழந்தை என்று கூட பாராமல் அந்த குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த முதியவர் தனது 2 பேரன்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் பேரன்கள் மற்றும்  பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..