கோவை பெண் சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ.5 லட்சம் நூதன மோசடி.!!

கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் ராஜேந்திர பிரசாத் வீதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகள் சூர்யா (வயது 26 )ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்தது. அதில் ஒரு நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் அதில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று “மெசேஜ்” வந்தது . இதை நம்பி சூர்யா ரூ.5 லட்சத்து 68 ஆயிரத்து 600 அனுப்பி வைத்தார் . அவருக்கு லாப தொகையும் வரவில்லை. அதுக்கப்புறம் தான் இது மோசடி என்று தெரியவந்தது. இது குறித்து சூர்யா கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..