கோவையில் குப்பை தொட்டியில் வெட்டப்பட்ட கை கிடைத்த நிலையில் உடல் இன்று கிணற்றில் இருந்து மீட்பு – காவல்துறை விசாரணை

கோவையில் குப்பை தொட்டியில் வெட்டப்பட்ட கை கிடைத்த நிலையில் உடல் இன்று கிணற்றில் இருந்து மீட்பு – காவல்துறை விசாரணை

கோவை துடியலூர் அருகே வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் குப்பைத் தொட்டியில் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட 45 வயது மத்திக்கத்தக்க ஆணின் இடது கை மீட்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து துடியலூர் போலீசார் கையை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

 

 

கோவை துடியலூர் அடுத்துள்ள வெள்ளக்கிணர் பிரிவு வி.கே.எல் நகர் பகுதியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வாகனம் மூலம் குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்துள்னர்.

அப்போது பிளாஸ்டிக் பையில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் இரண்டு துண்டுகளான ஆணின் கை கிடந்த நிலையில்

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் உடனடியாக துடியலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு கோவை மாவட்ட காவல் கண்காளிப்பாளர் பத்திரிநாத், பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்றனர். இதை தொடர்ந்து இரண்டு துண்டுகளாகக் கிடந்த அந்தக் கையை ஆய்வு செய்த போது அது 45 வயது மதிக்கத்தக்க ஆணின் இடது கை என தெரிய வந்துள்ளது.

 

மேற்கொண்டு விசாரணை செய்ய கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து போலீசார் அக்கம் பக்கத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் அருகில் உள்ள காவல் நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்

இந்நிலையில் இன்று துடியலூர் சந்தை பின்புறம் உள்ள கிணற்றில் உடல் பாகங்கள் தெரிவதாக அருகில் உள்ள பொது மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் உடனே அங்கு சென்ற காவல் துறையினர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உடலை மீட்பு வருகின்றனர். மேலும் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப உள்ளனர். மேலும் மருத்துவ பரிசோதனை சான்றிதழ் வந்த பிறகு தான் இறந்த நபரின் குறித்து விபரங்கள் தெரியவரும் எனக்கு காவல்துறையினர் தெரிவித்தனர்