வெளிநாட்டில் ஓட்டல் தொடங்குவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி – 2 பேர் மீது வழக்கு..!

கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் பழனிச்சாமி. அவரது மகன் சதீஷ்குமார் (வயது 33 )இவரிடம் கோவையை சேர்ந்த சித்ரா ஸ்ரீ ராமசாமி, கருணீஸ்வரன் ஆகியோர் தாங்கள் வெளிநாடுகளில் கோவையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலின் கிளைகளை துவங்க போவதாக கூறினார்கள். இதற்கு தங்களுக்கு ரூ 36 லட்சம் தருமாறும்,ஒரு வருடத்தில் அதை திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் கூறினார்கள்.இதை நம்பிய சதீஷ்குமார் வங்கி கணக்கில் அவர்களுக்கு ரூ. 36 லட்சம் அனுப்பி வைத்தார்.அவர்கள் கூறியபடி ஒட்டல் தொடங்கவில்லை. அந்த பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இது குறித்து சதீஷ்குமார் பீளமேடு போலீசில் புகார் செய்தார் .போலீசார் சித்ரா ஸ்ரீ ராமசாமி, கருணீஸ்வரன் ஆகியோர் மீது மோசடி, கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..