பூண்டி வெள்ளியங்கிரி 5வது மலையில் பக்தர் திடீர் மரணம்..

கோவை துடியலூர் அருகே உள்ள வீரபாண்டி .லட்சுமி நகரை சேர்ந்தவர் கிரண் ( வயது 22 ) இவர் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு செல்வதற்காக மலை ஏறினார். 5-வது மலையில் ஒட்டன் சமாதி அருகில் சென்ற போது அவருக்கு திடீர் உடல் குறைவு ஏற்பட்டது. இதனால் மயங்கி கீழே விழுந்தார். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே பூண்டி அடிவார பகுதியில் இருந்த ஊழியர்கள் விரைந்து சென்று டோலி மூலம் தூக்கி அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கிரண் பரிதாபமாக இறந்தார் .இதுகுறித்து ஆலந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.