கஞ்சா விற்ற பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை: கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கஞ்சா விற்ற பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை: கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை மாநகர பகுதியில் போதைப் பொருள்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் இரவு நேர ரோந்து பணியும் தீவிர படுத்தப்பட்டு உள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பீளமேடு போலீசார் ரோந்து சென்றனர். அப்பொழுது அவர்கள் கொடிசியா சாலையில் உள்ள மண்டல அறிவியல் மையம் அருகே வந்த போது கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் கோவை கவுண்டம்பாளையம் காந்தி நகரை சேர்ந்த சொக்கநாதன் அவருடைய மனைவி சுகுணா என்பது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் அந்த தம்பதியர் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 3000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இது தொடர்பாக கோவை இன்றியமையா பண்டங்கள் மற்றும் போதை பொருள்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அந்த வழக்கில் அரசு தரப்பில் சிவகுமார் ஆஜராகி வாதாடினார். விசாரணை நடந்து கொண்டிருக்கின்ற போது சொக்கநாதன் உயிரிழந்து விட்டார். இதை அடுத்து சுகுணா மீது மட்டும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது. இதை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட சுகுணாவுக்கு 10 ஆண்டு சிறை மற்றும் ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி லோகேஸ்வரன் தீர்ப்பு கூறினார். மேலும் ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இதை அடுத்து போலீசார் சுகுணாவை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.