சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.35 லட்சம் பணத்துடன் வந்த 2 பேர் கைது..!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் ஐ ஜி ஈஸ்வரரா வின் உத்தரவின் பேரில் அனைத்து நடை மேடைகளையும் போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொண்டனர். அப்போது ரயிலை விட்டு திபு திபு வென ஓடி வந்தனர். அதில் ஒருவன் மட்டும் கையில் வைத்திருந்த பணப் பையுடன் கீழே விழுந்தான். அதிலிருந்து பணக் கட்டுகள் கீழே சிதறி விழுந்தன . அதைப் பார்த்த ரயில்வே போலீஸ் படையினர் அள்ளி எடுத்தனர் . மர்ம ஆசாமியை தூக்கிப்பிடித்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். அவரது பெயர் கிருஷ்ணமூர்த்தி வயது 53 தகப்பனார் பெயர் நாராயணசாமி இரண்டாவது குறுக்கு தெரு கெம்பே லேஅவுட் லஹரி பெங்களூரு சேர்ந்தவர் . அவர் வைத்திருந்த ரூபாய் 25 லட்சத்திற்கு கணக்கு இல்லாமல் இருந்ததால் கைது செய்து வருமான வரித்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதே போல் ஆந்திர மாநிலம் குன்டுரை சேர்ந்த வாசு வயது 42 அவர் வைத்திருந்த பையில் ரூபாய் 10 லட்சம் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர் . அவர் வைத்திருந்த பணத்திற்கு கணக்கு இல்லை. இதுகுறித்து வருமான வரித்துறைக்கு தகவல் கொடுத்தனர். கைது செய்யப்பட்டுள்ளார். தனியாக போலீஸ் ஏடிஜிபி வனிதா தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தங்கள் பங்கிற்கு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்..