10 அடி நீளமுள்ள மலை பாம்பு: கோவை குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பரபரப்பு பரபரப்பு

10 அடி நீளமுள்ள மலை பாம்பு: கோவை குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பரபரப்பு பரபரப்பு.

கோவை தொண்டாமுத்தூர் குப்பேபாளையம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இரவு சுமார் 10 அடி நீளமுள்ள மலை பாம்பு புகுந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அங்கு வந்த வனவர் கோபால் தலைமையிலான வனத்துறையினர் குடியிருப்பிற்குள் புகுந்த 10 அடி மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.

 

பின்னர் அந்த பாம்பை பத்திரமாக அடர் வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.