கடைக்குச் சென்ற மூதாட்டியிடம் தங்க செயின் பறிப்பு – மடக்கி பிடித்து போலீசிடம் ஒப்படைப்பு..!

கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் ,அம்மன் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் .இவர் இறந்து விட்டார். இவரது மனைவி காஞ்சனா ( வயது 60)இவர் நேற்று விநாயகபுரத்தில் உள்ள ஒருமளிகை கடைக்கு தனது மருமகளுடன் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த விநாயகபுரத்தை சேர்ந்த முத்து பாலாஜி என்பவர் காஞ்சனா கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பி ஓடினார்.காஞ்சனாவும் அக்கம் பக்கம் உள்ளவர்களும் அந்த ஆசாமியை துரத்தி சென்றனர். அப்போது அவர் 20 அடி உயரத்தில் தவறி கீழே விழுந்தார். அவரை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த 2 பவுன்செயினை கைப்பற்றினார்கள்.அவர் சரவணம்பட்டி போலீசில் ஒப்டைக்கப்பட்டார்..