மருத்துவமனை படிக்கட்டில்இருந்து தவறி விழுந்து காவலாளி பலி…

கோவை கரும்புக்கடை சுண்ணாம்பு காளவாய் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை உள்ளது..இங்கு ஒடிசாவைச் சேர்ந்த சரோஜூ பிரதன் (வயது 38) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.”நேற்று இவர் மருத்துவமனை படிக்கட்டில் ஏறும்போது தவறி விழுந்தார்.இதில் பலத்த காயம் ஏற்பட்டது. சூழ்ச்சிக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து கரும்புக்கடை போலீசில்புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.