கோவைமாணவன் மயங்கி விழுந்து சாவு

கோவை சிங்காநல்லூரில் உள்ளபூச்சியம்மாள் லேஅவுட் சேர்ந்தவர் வசந்தகுமார் ,இவரது மகன் நிஷாந்த் (வயது 14 )வரதராஜபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.சீரநாயக்கன்பாளையத்தில் வசிக்கும் இவனது தாத்தா கடந்த வாரம் இறந்து விட்டார். 3 -வது நாள் நிகழ்ச்சிக்காக தனது பெற்றோர்களுடன் தாத்தா வீட்டுக்கு சென்றிருந்தான்.அங்கு விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தான். சிகிச்சைக்காக மருத்துவமனை எடுத்துச் சென்றனர். வழியில் அவன் இறந்து விட்டான்.இது குறித்து தந்தை வசந்தகுமார் ஆர் .எஸ். புரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.