கோவையில் 2 வீடுகளில் 20 பவுன் நகை-பணம் திருட்டு ..!

கோவையில் 2 வீடுகளில் 20 பவுன் நகை-பணம் திருட்டு ..! கோவை குனியமுத்தூர், கிருஷ்ணசாமி நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் தனது மனைவியுடன் அங்கு வசித்து வருகிறார். கடந்த 19ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சாவியை கதவிலே வைத்துவிட்டு தூங்கசென்று விட்டார். நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 11 பவுன் நகைகள், ரூ10 ஆயிரம் பணம் ஆகியவற்றை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ராமகிருஷ்ணன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். இதேபோல கோவை சரவணம்பட்டி ,சின்ன மேட்டுப்பாளையம் துரைசாமி நாயுடு நகரை சேர்ந்தவர் ராஜசேகர், இவரது மனைவி மனு ( வயது 23)தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கமாக வீட்டை பூட்டி விட்டு சாவியை வீட்டின் பாத்ரூம் சுவரில் வைத்து விட்டு செல்வார். நேற்று மாலை வேலைக்கு சென்று விட்டுதிரும்பி வந்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளைகாணவில்லை. யாரோ சாவியைஎடுத்து கதவை திறந்து நகைகளை திருடி சென்று விடடனர். இது குறித்து மனு சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.