சிறுவனிடம் பணம் பறித்த திருநங்கை கைது..!

சிறுவனிடம் பணம் பறித்த திருநங்கை கைது..! கோவை  திருப்பூர் மாவட்டம் பல்லடம் ,பணிக்கம் பட்டி அருகே உள்ள சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சபரீஷ் (வயது 16)இவர் நேற்று மோட்டார் உதிரி பாகங்கள் வாங்குவதற்காக கோவைக்கு வந்தார். டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் நடந்து செல்லும் போது அங்கு வந்த ஒரு திருநங்கை இவரை மிரட்டி சட்டை பையில் இருந்த 1300 ரூபாயை பறித்தார்.உடனே சபரி சத்தம் போட்டார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்து அந்த திருநங்கையை பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப் படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.விசாரணையில் அவர் ரத்தினபுரி கண்ணப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்ற ரோஸ்மா ஜாஸ்மின் (வயது 24) என்பது தெரிய வந்தது.இவரிடமிருந்து பணம் பறிமுதல் செய்யபட்டது.