கோவையில் தாய் வீட்டில் 27 பவுன் நகை திருடிய மகன் கைது ..! 

கோவையில் தாய் வீட்டில் 27 பவுன் நகை திருடிய மகன் கைது ..!  கோவை சாய்பாபா காலனி, பக்கமுள்ள வேலாண்டிபாளையம், டாக்டர். ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சாந்தி ( வயது 50) சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ் ( வயது 29) ஐடி கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.தற்போது விக்னேஷ் ஆர் .எஸ் .புரம். பூ மார்க்கெட் பகுதியில் வசித்து வருகிறார். இவரது தாயார் சாந்தி கடந்த 3ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு காசிக்கு சென்றிருந்தார்..13ஆம் தேதி திரும்பி வந்தார். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த 27 பவுன் நகைகளை காணவில்லை.. இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார் .உதவி போலீஸ் கமிஷனர் பசினா பீவி, மேற்பார்வையில்,இன்ஸ்பெக்டர் ரெஜினா வழக்கு பதிவு செய்து சாந்தியின் மகன் விக்னேஷ் என்பவரை நேற்று கைது செய்தார் .தாயார் கோவிலுக்கு சென்ற நேரம் இவர் வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திடுடியதாக வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இவரிடம் இருந்து 27 பவுன் நகை மீட்கப்பட்டது இதன் மதிப்புரு 10 லட்சம் இருக்கும்..