கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி விஷம் குடித்து தற்கொலை..

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி விஷம் குடித்து தற்கொலை. கோவை வடவள்ளி அருகே உள்ள காளப்பநாயக்கன்பாளையம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் .இவரது மனைவி நதியா (வயது 37)கணவர் இறந்த தூக்கம் தாங்க முடியாமல் நேற்று வீட்டில் சாணி பவுடரை குடித்தார் .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து அவரது தந்தை பழனிச்சாமி வடவள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.