கல்லூரி மாணவரை அரிவாளை காட்டி பணம் கொள்ளை- வாலிபர் கைது..!

கோவை : கேரள மாநிலம் ,இடுக்கி மாவட்டம் மூணார் ,தேவிகுளத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் ராஜேஷ் ஆதித்யா. இவர் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி . மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். புலிகுளம். பெரியார் நகரில் தனது நண்பர்களுடன் தங்கி உள்ளார்.நேற்று இரவு இவர் மீனா எஸ்டேட்டில் உள்ள தனது நண்பர்களை பார்த்துவிட்டு சவுரி பாளையம் ரோடு ,கல்லறை தோட்டம் அருகே நடந்து வந்தார் .அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி ராஜேஷ் ஆதித்யாவை அரிவாளை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 1,250 ரூபாயை கொள்ளை அடித்தார். இதனால் ராஜேஷ் ஆதித்யா சத்தம் போட்டார் . அப்போது அக்கம் பக்கம் உள்ளவர்களும் ராகேஷ் ஆதித்யாவின் நண்பர்களும் சேர்ந்து அந்த ஆசாமியை மடக்கி பிடித்து ராமநாதபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர் .விசாரணையில் அவர் ராமநாதபுரம் எம். எஸ். கே. நகரை சேர்ந்த அருண்குமார் (வயது 27) என்பது தெரியவந்தது. இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரிடம் இருந்து பணம்  அரிவாளும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..