வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவர்- மாமியார் உட்பட 3 பேர் மீது இளம்பெண் புகார்..!

கோவை குனியமுத்தூர் ,சாய் கார்டன் ,முதல் வீதியை சேர்ந்தவர் இப்ராஹிம் இவரது மனைவி சப்ரின் ( வயது 24) இவர்கள் இருவருக்கும் கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது .இந்த நிலையில் சப்ரின் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தனது கணவர் இப்ராஹிம், மாமியார் உமுசாய்மா, சகோதரி செவியம்மாள் ஆகியோர் சேர்ந்து வரதட்சணை வாங்கி வருமாறு கேட்டு தன்னை தாக்கியதாக கூறியுள்ளார்.இது தொடர்பாக கணவர் இப்ராஹிம், மாமியார் நாத்தனார் ஆகியோர் தாக்குதல் ,வரதட்சனை கொடுமை உட்பட 3 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.