மனைவிக்கு தெரியாமல் 2 -வது திருமணம் செய்த கணவர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்..!

கோவை கரும்புக்கடை, சவுகார் நகரை சேர்ந்தவர் அப்துல் காதர் .இவரது மகள் அஸ்மி (வயது 28) இவருக்கும் சிவகிரி, விஸ்வநாத பேரியைச் சேர்ந்த வாசிம் அக்ரம் என்பவருக்கும் கடந்த 17 -3 -2019 அன்று சிவகிரியில் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது அஸ்மியின் பெற்றோர்கள் 50 பவுன் நகை வரதட்சணையாக கொடுத்தனர் .திருமணம் முடித்து இரண்டு நாட்கள் களித்து வாசிம் அக்ரம் தனது மனைவியிடம் பேசுவதை நிறுத்தினார்.அவரது பெற்றோர்கள் ஆறுதல் கூறினார்கள்.இந்த நிலையில் வாசிம் அக்ரம் அவரது மனைவிக்கு தெரியாமல், விவாகரத்து பெறாமல் 2-வது திருமணம் செய்து கொண்டாராம் .இது குறித்து அஸ்மி கோவை மேற்குபகுதி பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வாசிம் அக்ரம் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.