பைக் மோதி இளம்பெண் பரிதாப பலி..

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தெற்கு பாளையத்தை சேர்ந்தவர் செல்வகுமார் . கட்டிட தொழிலாளி இவரது மனைவி வைஷ்ணவி ( வயது 25) இவர் நேற்று முன்தினம் கோவை- மேட்டுப்பாளையம் ரோடு கேஸ் கம்பெனி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது. இதில் வைஷ்ணவி படுகாயம் அடைந்தார் .கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தியதாக துடியலூர் சேர்ந்த சரண் என்பவரை கைது செய்தனர் .மேலும் விசாரணை நடந்து வருகிறது.