சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தூக்கில் தொங்கிய இளம்பெண்..

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் மாடியில் அலுவலர்கள் ஓய்வு எடுக்கும் அறைக்கு வெளியே 26 வயது மதிக்கத்தக்க இளம் பெண் கருப்பு கலர் துணியால் இரும்பு ஸ்டாண்டில் தூக்கில் தொங்கியவாறு அமர்ந்த நிலையில் பிணமாக கிடந்தார். நீல நிற ஜீன்ஸ் பேண்டும் கருப்பு நிற முழு கை சட்டை அணிந்திருந்தார். இவரை யாராவது கொலை செய்தார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் துணை சூப்பிரண்டு கர்ணன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் பிரேதம் சென்னை ராஜீவ் காந்தி பிரேத பரிசோதனை கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. அவரைப் பற்றி முழு விவரம் தெரிந்தவர்கள் சென்ட்ரல் ரயில் நிலைய காவல் நிலையத்தில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

தற்கொலை செய்து கொண்டிருப்பது கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா வயது 25 தாய் இறந்த துக்கத்தில் சென்னை சென்ட்ரலுக்கு வந்து தற்கொலை செய்ததாக தகவல் கிடைத்துள்ளது..