கோவையில் ஓடும் பஸ்சில் போலீஸ்காரர்-கல்லூரி மாணவரிடம் பணம் ஜேப்படி…

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த போலீஸ்காரர் முத்துவேல்.இவர் நேற்று கோவை காந்திபுரத்தில் இருந்து ஈஷா மையத்துக்கு செல்லும் டவுன் பஸ்சில் பயணம் செய்தார். இந்த பஸ்சில் கூட்டம்அதிகமாக இருந்தது. நெரிசலை பயன்படுத்தி அவரது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த பர்சை ஒரு ஆசாமி நைசாக ஜேப்படி செய்தார். இதை அறிந்த போலீஸ்காரர் முத்துவேல் பஸ் கண்டக்டரிடம்பஸ்சை நிறுத்தும்படி கூறினார். மேலும் அந்த பஸ்சில் பயணம் செய்த கல்லூரிமாணவரிடமும் அந்த ஆசாமி பணம் திருடியுள்ளார். இந்த நிலையில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலைய பகுதியில் பஸ் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அதற்குள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அந்த ஆசாமி நைசாக தப்பிச் சென்று விட்டார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.ஓடும் பஸ்ஸில் போலீஸ்காரர் இடமும் கல்லூரி மாணவரிடமும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.