பேத்தி மாயமானதால் 75 வயது பாட்டி விஷம் குடித்து தற்கொலை…

கோவை மாவட்டம் சிறுமுகையில் உள்ள கெம்பே கவுடர் வீதியைச் சேர்ந்தவர் நீலமேகம். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 75 ) சில நாட்களுக்கு முன்பு இவரது பேத்தி திடீரென்று மாயமாகிவிட்டார்.இதனால் மனம் உடைந்த பாட்டி ஜெயலட்சுமிநேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் சாணி பவுடரை கரைத்துக் குடித்தார் .அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து அவரது மகன் செல்வராஜ் சிறுமுகை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.