கல்லூரி ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை…

கோவை பக்கம் உள்ள தேவம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்,இவரது மகன் ஹரிஷ் (வயது 25) அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் அலுவலக ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை ,இந்த நிலையில் வாழ்க்கையில்வெறுப்படைந்த
ஹரிஷ் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் விட்டதில்தாயாரின் சேலையைக் கடடி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது தாய் பொன்னம்மாள்(வயது 53) கோவில் பாளையம் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.