ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாரா மெடிக்கல் சயின்ஸ் காலேஜ் ஆப் பிசியோதெரபி மற்றும் காலேஜ் ஆப் ஆக்குபேஷனல் தெரபி கல்லூரிகளால் விழுமியம் – 2k24 பொங்கல் விழா…

கவுந்தப்பாடி அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாராமெடிக்கல் சைன்ஸ் காலேஜ் ஆப் பிசியோதெரபி மற்றும் காலேஜ் ஆப் ஆக்குபேஷனல் தெரபி கல்லூரிகள் இணைந்து சமத்துவ பொங்கல் தினத்தை சிறப்பாக கொண்டாடினர்.இதன் தொடர்ச்சியாக மாபெரும் விழிப்புணர்வு பேரணியை 13.01.2024 சனிக்கிழமை அன்று கள்ளியங்காட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து தொடங்கி தமிழர்களின் பாரம்பரிய நடனமாகிய ஒயிலாட்டம், மோகினி ஆட்டம் , மயிலாட்டத்துடன் செண்டை மேளமும் பறை இசையும் முழங்க மாணவ& மாணவிகள் கல்லூரி வளாகம் வந்தடைந்தனர். இவ்விழாவினை கல்லூரியின் செயலாளர் திரு கே சி கருப்பணன் அவர்கள் தலைமை ஏற்று கொடி அசைத்து துவக்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை கல்லூரியின் தலைமை நிர்வாகி திரு. க. கௌதம் அவர்கள் காளை மாடுகளுக்கு பூஜை செய்து துவக்கி வைத்தார். இவ்விழாவினை கல்லூரி முதல்வர் பேராசிரியர் நந்தகுமார் ராமசாமி முன்னிலை வகித்தார்.