கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை …

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள ஜமீன் காளியாபுரம்,மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் மயில்சாமி ( வயது 57 )விவசாயி. இவர் நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து அங்குள்ள உதயகுமார் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி கண்ணம்மாள் வடக்கி பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.