நீலகிரியில் சிறுத்தை தாக்கி சிறுமி பலி…

நீலகிரி மாவட்ட கூடலூர் பகுதியில் உள்ள பந்தலூர் வட்டம் மேங்கோரேஞ் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியின் மூன்று வயது மகள்-நான்சி மேங்கோரேஞ் பால்வாடிக்கு சென்று தனது தாயுடன் வரும் போது தேயிலை தோட்டத்தில் மறைந்திருந்து சிறுத்தை திடீரென்று பாய்ந்து மூன்று வயது சிறுமி நான்சியை கடித்து தேயிலைத் தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றது இதை அறிந்து ஊர் ஜனங்கள் சிறுமியை தேயிலை தோட்டம் முழுவதும் தேடி போது ரத்த வெள்ளத்தில் சிறுமியை மீட்டனர், ஊர் மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சிறுமி தூக்கி சென்றனர், பலத்த காயம் ஏற்பட்டதால் சிறுமி மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியிலே குழந்தை இறந்து விட்டது, குழந்தையின் பெற்றோர் கதறி அழும் காட்சி அனைவருடைய கண்களை கலங்க செய்தது, கூடலூர் பகுதியில் வனவிலங்குகளால மனிதர்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றன,
தமிழக நீலகிரி வனத்துறை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்று அப்பகுதி மக்கள் கொந்தளிப்பிலும் கோபத்திலும் உள்ளனர், தற்போது அப்பகுதி மக்கள் சாலை மறியலில் இறங்கியுள்ளனர் , இதனைதொடர்ந்து மேங்கோரெஞ், பந்தலூர், தேவாலா பகுதியில் மக்கள் தன்னெழுச்சியாக சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர், புலியை சுட்டுபிடிக்கும் வரை போராட்டம் தொடரும் என அப்பகுதி மக்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்