போலீஸ் மனைவியை சமைக்கச் சொல்லி போலீஸ்கார கணவன் சித்திரவதை பெண் போலீஸ் தற்கொலை…

திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் ரோஜா திருவள்ளூர் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் ராஜ்குமார் மாவட்ட குற்றப்பிரிவில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு முகேஷ் என்ற மகனும் சம்யுக்தா என்ற மகளும் உள்ளனர் இரவு வீட்டிற்கு வந்த ராஜ்குமார் மனைவி ரோஜாவிடம் பசிக்கிறது உடனடியாக சமையல் செய் எனக் கூறியுள்ளார் ரோஜாவோ என்னால் முடியாது காலையில் எழுந்ததும் வேலைக்கு செல்ல வேண்டுமென கூறியுள்ளார் வேண்டுமென்றால் ஹோட்டலில் உணவை வாங்கி வந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள் குழந்தைகளுக்கும் ஊட்டி விடுங்கள் எனக் கூறியுள்ளார் பதிலுக்கு ராஜ்குமார் மதியமும் சாப்பாடு செய்யாமல் இரவும் சாப்பாடு செய்யாமல் சோம்பேறித்தனமாக இருந்தால் குடும்பம் எப்படி உருப்படும் என சத்தம் போட்டு உள்ளார் பதிலுக்கு ரோஜாவும் கத்த இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது ஆத்திரத்துடன் ரோஜா படுக்கை அறைக்கு சென்று கத வை தாழ்ப்போட்டுக் கொண்டார் பத்து நிமிடம் கழித்து ராஜ்குமார் மனைவி ரோஜா கதவை திறக்காததால் கதவை தட்டிப் பார்த்தார் பதில் இல்லாததால் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார் உள்ளே ரோஜா மின்விசிறி யில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் அவரது உடலை மீட்டு திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்