நூல் விலை கிலோவுக்கு ரூ.30 குறைவு: ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்பு-தொழில் துறையினர் மகிழ்ச்சி..!!

திருப்பூர்‌ பின்னலாடை உற்பத்தியில்‌ சுமார்‌ 85 சதவீதம்‌ சிறு, குறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌ தான் செயல்பட்டு வருகின்றன.

இங்கு சுமார்‌ 20 ஆயிரத்துக்கும்‌ மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி மற்றும்‌ அதனைச்சார்ந்த தொழிற் நிறுவனங்கள்‌ செயல்படுகின்றன. இந்த தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்‌.

கடந்த சில மாதங்களாக பின்னலாடை உற்பத்திக்குத்‌ தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடுமையாக உயர்ந்தது. குறிப்பாக ஏப்ரல்‌, மே மாதங்களில்‌ மட்டும்‌ கிலோவுக்கு ரூ.70 வரையில்‌ உயர்ந்தது. இதனை தொடர்ந்து நூல் விலையை குறைக்க வேண்டும் என்று பின்னலாடை உற்பத்தியாளர்கள், நூற்பாலை சங்கங்கள் மற்றும் மத்திய, மாநில
அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

முன்னதாக கடந்த ஜூலை மாதம் அனைத்து ரக நூல்களும்‌ கிலோவுக்கு ரூ.40 குறைக்கப்பட்டது. நூல்களின் விலை குறைந்துள்ளதால், பின்னலாடை ஏற்றுமதி மற்றும்‌ உள்நாட்டு வர்த்தகத்துக்கான ஆர்டர்கள்‌ அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நூற்பாலை சங்கங்கள் அறிவிப்பு

இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான நூல் விலை குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதத்தில் அனைத்து ரகத்திற்கும் கிலோவிற்கு 30 ரூபாய் குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.333-க்கும், 34-ம் நம்பர் ரூ.375-க்கும், 40-ம் நம்பர் ரூ.395-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.325-க்கும், 34-ம் நம்பர் ரூ. 365-க்கும், 40-ம் நம்பர் ரூ.385-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் நூல் விலை ரகத்திற்கு ஏற்றபடி 320 ருபாய் முதல் 400 ருபாய் வரை விற்கப்படுகிறது. அனைத்து வகையான நூல் விலை கிலோவுக்கு ரூபாய் 30 குறைந்துள்ளதால் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.