கோவை வங்கி அருகே கஞ்சா விற்ற தொழிலாளி கைது- 3 கிலோ கஞ்சா பறிமுதல்..!

கோவை மாவட்டம் ,காரமடை அருகே தென் திருப்பதி நால் ரோட்டில் உள்ள ஒரு வங்கி அருகே நின்று கொண்டு ஒருவர் கஞ்சா வியாபாரம் செய்வதாக காரமடை போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் குமார் அங்கு விரைந்து சென்று அந்த நபரிடம் சோதனை நடத்தினார் .அவரிடம் 3 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் துடியலூர் அண்ணா காலனியை சேர்ந்த ரகுநாதன் ( வயது 40) என்பது தெரியவந்தது. இவர் கட்டிட தொழில் செய்து வருகிறார்.மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். அவரது பெயர் முகிலன் பவானிசாகரைச் சேர்ந்தவர். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.