கோவை டாஸ்மாக் கடையின் முன் தொழிலாளி அடித்துக் கொலை – வாலிபர் கைது..

கோவை : தென்காசி மாவட்டம் சிவராம் பேட்டை பை சேர்ந்தவர் செல்லப்பா இவரது மகன் மாரிதுரை ( வயது 50) பெயிண்டர். இவர் கடந்த 15 ஆண்டுகளாக கோவை வீரபாண்டி பிரிவு அருகே தங்கியிருந்து பெயிண்டிங் வேலை செய்து வந்தார் .இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. நேற்று அதிகாலை 2 மணி அளவில் அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே மது அருந்த வந்த யாரோ குடிபோதையில் இவரை அடித்து உதைத்து உள்ளனர் .. இதையடுத்து அதிகாலை 3 மணி அளவில் அந்த வழியாக வந்தவர்கள் சிலர் மாரி துரை ரோட்டில் பிணமாக கிடப்பதை பார்த்தனர் .இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது . போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாரி துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நடந்த விசாரணையில் கொலையாளி யார்? என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாரித்துறை நேற்று முன்தினம் இரவில் அங்குள்ள மதுக்கடைக்கு மது குடிக்க சென்றார் . அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஜோதிபுரம் திருமலை நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த வரதராஜன் மகன் சக்திவேல் (வயது 19) என்பவர் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டார். இதற்கு மாரி துரை மறுத்தார் . இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் அவரை ரோட்டில் கிடந்த சிமெண்ட் கல்லால் அடித்து கொலை செய்ததாக தெரிய வந்தது. இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து மாரி துரையை அடித்து கொலை செய்த சக்திவேல் கைது செய்யப்பட்டார் . இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்..