ரூ.10 லட்சம் கேட்டு காதலிக்கு கொலை மிரட்டல் – காதலன் உட்பட 5 பேர் மீது வழக்குபதிவு..!

கோவை வேலாண்டிபாளையம், கிரி நகரை சேர்ந்தவர் சிவராஜ் இவரது மகள் மோனிஷா ( வயது 26) இவரும் அதே பகுதியை சேர்ந்த பரத் என்பவரும் கடந்த ஒரு ஆண்டுகளாக காதலித்து வந்தனர் . இருவரும் கணவன் -மனைவி போல வாழ்ந்து வந்தனர் . இதனால் மோனிஷா 4 தடவை கர்ப்பமாகி கருவை கலைத்துள்ளார். இந்த நிலையில் பரத் மோனிஷாலிடம் தொழில் தொடங்குவதற்காக என்று கூறி பல தடவை பணம் வாங்கி உள்ளாராம்..இந்த நிலையில் பரத்தின் பெற்றோர்கள் அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்களாம். இதனால் பரத் மோனிஷாவிடம் ரூ 10 லட்சம் கொடுத்தால் தான் அவரை திருமணம் செய்வதாக கூறினாராம். இதற்கு அவரது பெற்றோர்கள் உறவினர்கள் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.இதை தட்டிக் கேட்ட மோனிஷாவை தகாத வார்த்தைகளால் பேசியும் வரதட்சணை கேட்டும் கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இது குறித்து மோனிஷா கோவை மத்திய பகுதி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி விசாரணை நடத்தி மோனிஷாவின் காதலன் பரத், மாமியார் சாந்தி உறவினர்கள் அருண் , தினகரன் ஆகியோர் மீது கொலை மிரட்டல் தாக்குதல் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..