மின்சாரம் தாக்கி பெண் பரிதாப பலி..

கோவை ராமநாதபுரம் கணேசபுரத்தில் உள்ள போலீஸ் கந்தசாமி விதையை சேர்ந்தவர் தேவராஜ் .இவரது மனைவி சாந்தி (வயது 49 ) இவர் நேற்று அவரது வீட்டில் தண்ணீர் எடுக்கும் மின்சார மோட்டார் சுவிட்சை போட்டார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்படடார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு சாந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இது குறித்து அவரது மகன் ராஜ்குமார் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.